×

“வாழ்க்கையில் ஒழுக்கமும், சிந்தனையில் நேர்மையும் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..” – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லம் முன்பு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இந்நிலையில், காலை 9.45 மணியளவில் தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், அவர்களுக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். அனைவரும் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; ஒழுக்கம் மற்றும் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் இருக்கும் இவ்வாறு கூறினார்.

The post “வாழ்க்கையில் ஒழுக்கமும், சிந்தனையில் நேர்மையும் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..” – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Chennai ,Pongal festival ,House ,Chennai Boyscardan ,Pongal ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா...